ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளும் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் Toss வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இதனடிப்படையில் ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னரும் அதிரடியை கைவிடாத இந்தியாவுக்கு தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் அரைச்சதமாக அமைந்தது, அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இறுதியாக வந்த கார்திக்கும் அடுத்தடுத்து 2 பவுன்டரிகளை விளாச இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி எதிர்பாராத சரிவை சந்தித்தது. ஜேசன் ரோய் 4 ரன்னுடன், கேப்டன் பாத்திரத்தில் அறிமுகமான ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக் அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார்.
அதிரடி வீர்ர்கள் பட்டாளம் நிறைந்த இங்கிலாந்து 19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்காரணத்தால் இந்திய இங்கிலாந்துடனான தவடரை நம்பஇக்கையுடன் ஆரம்பித்தது, நேற்றைய வெற்றி ரோகித் சர்மாவின் தொடர்ச்சியான 13 வது T20 வெற்றியாகும் .
தொடர்ந்து 12 ஆட்டங்கள் வென்றிருந்த அஷ்கர் ஆப்கானின் உலக சாதனையை ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.