சிக்சர் அடித்தால் பந்து மாற்றப்படும் -கொரோனாவால் வரும் விசித்திர கெடுபிடிகள் தெரியமா ?

UAE யில் செப்டம்பர் 15 ஆரம்பிக்கவுள்ள 2 ம் கட்ட ஐபிஎல் T20 தொடரில் கூடுதலாக பாதுகாப்பை உருவாக்கும் வகையில் ஏற்கனவே இருக்கும் விதிகளில் புதிய மாற்றங்களை ஐபிஎல் நிர்வாகம் செய்துள்ளது.

அதில் முக்கியமானது பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டால், பந்து அரங்கிற்கு வெளியே சென்றாலும், மைதானத்தின் எல்லைக் கோட்டைவிட்டு பார்வையாளர்கள் இருக்கைப்பகுதிக்குச் சென்றால் 4-வது நடுவர் மூலம் புதிய பந்து மாற்றப்படும்.

மைதானத்தின் இருக்கைப் பகுதியிலிருந்து எடுத்துவரப்படும் பந்து சானிடைஸ் செய்தும், ஆல்கஹால் துணி கொண்டு துடைக்கப்பட்டு மறுபடியும் பயன்படுத்தப்படும்.

BCCI நடத்திய ஆய்வின்படி, பந்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அதனால் பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கியஅரபு அமீரகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் போட்டியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பார்வையாளர்கள் இடைவெளிவிட்டு அமர அறிவுறுத்தப்படுவார்கள்.

கழிவறைகள், குளியல்அறை போன்றவற்றில் வீரர்கள், ஊழியர்கள், எச்சில் துப்புதல், காரி உமிழ்தல், தும்முதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட டிஷ்யு காகிதங்களை முறையான குப்பைத்தொட்டியில் சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது்.

இங்கிலாந்தில் தற்போது விளையாடிவரும் இந்திய வீரர்கள் நேரடியாக பயோ-பபுள் சூழலுக்குள் செல்வார்கள். பயோ-பபுள் டிரான்ஸ்வர் முறையில் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.

வீரர்கள் கோல்ப் மைதானத்துக்கு செல்லலாம். ஆனால், 24 மணிநேரத்துக்கு முன்பாக, ஐபிஎல் மருத்துவ அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கோல்ப் மைதானம் முழுமையாக, ஐபிஎல் வீரர்கள் பயன்படுத்த எடுக்கப்பட்டுள்ளதால், புதிய யாருக்கும் அனுமதியில்லை.

கோல்ப் கிளப்பில் இருக்கும் மதுபான விடுதி, ரெஸ்டாரன்ட், காபே, உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் லாக்கர் அறையையும்பயன்படுத்த வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் மைதானத்தில் உள்ள குளியல் அறையையும் பயன்படுத்த வீரர்களுக்கு தடை உள்ளது.

மைதானத்தில் இடைவேளையின்போது, குடிநீர், குளிர்பானங்கள் வீரர்கள் எடுத்துவரும்போது, அந்தந்த வீரர்களின் பாட்டில்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஒருவீரர் குடித்தவிட்டு மீதமிருப்பதை மற்றொருவர் பருகக்கூடாது.

இவ்வாறு ஐபிஎல் ஏராளமான விதிகள் புதிதாக சேர்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Web – www.vilaiyaddu.com