விடாப்பிடியாக அடம் பிடிக்கும் இலங்கை வீரர்கள்- மீண்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட மறுத்தனர், அடுத்த நடவடிக்கை என்ன?

விடாப்பிடியாக அடம் பிடிக்கும் இலங்கை வீரர்கள்- மீண்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட மறுத்தனர், அடுத்த நடவடிக்கை என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவரும் நிலை நீடிக்கின்றது,

இங்கிலாந்துடனான தொடரை முடித்துக்கொண்டு இன்று தாயகம் திரும்பிய இலங்கை வீரர்கள்,வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இன்று (06) இரவு 8 மணி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆயினும் இவர்கள் இன்று இரவு 8 மணியாகியும் இதுவரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு இறங்கும் என்று நம்பப்படுகின்றது.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய பல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) வழங்கிய சுற்றுலா ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளனர்.

எஸ்.எல்.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு விதித்த காலக்கெடு இன்று(06) இரவு 8 மணிக்கு முடிந்தது, அணி வட்டாரங்களின்படி, இங்கிலாந்து சுற்றுப்பயண அணியில் இருந்த கிட்டத்தட்ட 10 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மற்ற கிரிக்கெட் வீரர்கள் மத்திய ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளனர், ஆனால் இந்த நேரத்தில் தங்களுக்கு சுற்றுலா ஒப்பந்தங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று எஸ்.எல்.சி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தவறும் எவரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தேர்வில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று எஸ்.எல்.சி தலைவர் ஷம்மி சில்வா இன்று  தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எஸ்.எல்.சி. நாளை காலை வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக கோரப்பட்ட தனிப்பட்ட மதிப்பீட்டு விவரங்களை வழங்கியிருந்தது, ஆனால் புள்ளிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வீரர்கள் கவலை தெரிவித்தனர்.

வீரர்கள் வெளிக்காட்டிய திறமையின் அடிப்படையிலேயே வீரர்களது ஒப்பந்த பட்டியில் தாயாரிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

Previous articleரஷீத் கான் தலைவராக நியமனம்…!
Next articleசென்னை அணியில் தல தோனி தொடர்வாரா- புதிய IPL விதிமுறையால் வரும் சிக்கல்..!