IPL ஏலத்தில் RCB அணி இலக்கு வைத்துள்ள வீரர்கள் மூவர் யார் தெரியுமா ?

IPL ஏலத்தில் RCB அணி இலக்கு வைத்துள்ள வீரர்கள் மூவர் யார் தெரியுமா ?

வருகின்ற 12,13 ம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ள IPL ஏலத்துக்காக எல்லா அணிகளும் தம்மை தயார் படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கோஹ்லி தலைவராக இருந்த ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, எதிர்வரும் IPL ஏலத்தில் 3 முக்கிய வீரர்களை குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர், இந்தியாவின் அம்பாதி ராயுடு, இளம் வீரர் ரியன் பராக் ஆகியோரை அந்த அணி இலக்கு வைத்துள்ளது.

ஹோல்டர் SRH அணிக்காகவும், ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், ரியன் பராக் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடியுள்ளனர்.

Previous articleஇங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம், அவுஸ்திரேலியாவுக்கு யார்? – ஆஷஸ் தொடர் கொடுத்த சிக்கல் …!
Next articleபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு…!