IPL க்கு பெருத்த தலையிடி..!

இந்த மாதம் ஏப்ரல் 9 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள 14 வது IPL போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் IPL போட்டிக்கு புதிய சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய சகலதுறை வீரரான அக்சர் பட்டேல் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

IPL போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுள் முதலமவராக அக்சர் பட்டேல் கொரோனா தொற்றுக்கு இலக்கானமை கவனிக்கத்தக்கது.