IPL தொடர்பில் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்…!

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் IPL போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் விளையாடியவருமான பென் ஸ்டோக்ஸ் IPL போட்டிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

IPL போட்டிகளின் இடைநடுவே உபாதையை சந்தித்தமை கவலையாக இருந்தது , ஆயினும் 9 வாரத்தில் விரைவாக என்னால் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப முடியும் என்று நம்புகின்றேன்.

IPL மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்பது தெரியாதது , போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, IPL போட்டிகளில் விளையாடக்கூடிய நிலைமை இருக்குமா என்பது தெரியாதது என்றும் அவர் கூறினார்.

இம்முறை நடைபெற்ற IPL போட்டிகளில் விளையாடிய ஸ்டோக்ஸ் பஞ்சாப் அணியுடனான போட்டியின்போது விரல்முறிவு உபாதை காரணமாக IPL போட்டிகளை தவறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.