IPL போட்டிகள் எப்போது – திகதிகள் தொடர்பில் தகவல் கசிந்தது…!

14 வது IPL போட்டி தொடரின் மீதமான போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் 29 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்,கொரோனா காரணமாக தடைப்பட்ட மீதமான 31 போட்டிகளும் எப்போது இடம்பெறும் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதன்படி ஒரு நாளுக்கு 2 போட்டிகள் எனும் அடிப்படையில் செப்டெம்பர் 19 ஆரம்பமாகி இறுதிப்போட்டி ஒக்டோபர் 15 ல் நிறைவுக்கு வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியஸ்தர் ஒருவர் ANI செய்திசேவைக்கு இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

டுபாய், அபுதாபி,சார்ஜா ஆகிய மைதானங்களில் மீதமான 31 போட்டிகளும் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் என்று அறியப்படுகின்றது.

இதேநேரம் இருபதுக்கு இருபது உலக்கிண்ண தொடரையும் இந்தியாவில் நடத்துவதை கைவிட்டு அதே ஐக்கிய அரபு அமீரக மைதானங்களிலேயே நடத்தி முடிக்க இந்திய கிரிக்கட் சபை ஆர்வம் காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.