IPL போட்டிகளில் மொத்தம் 8 இலங்கையர்கள்- முழுமையான விபரம்…!

 

இந்தியாவில் இடம்பெறும் IPL போட்டிகளில் இம்முறை இலங்கையர்கள் 8 பேரது பங்குபற்றுதல் அமையப்பெற்றுள்ளது. பெங்களூரில் இடம்பெற்ற ஐபிஎல் 2022 ஏலத்தில் ஐந்து இலங்கை வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இணைக்கப்பட்டனர்.

வனிந்து ஹசரங்க – ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் -10 .75 கோடி INR
துஷ்மந்த சமீர – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – 2 கோடி INR
மகேஷ் தீக்ஷனா – சென்னை சூப்பர் கிங்ஸ் -70 லட்சம் INR
சாமிக்க கருணாரத்ன – கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் -50 லட்சம் INR
பானுகா ராஜபக்ச – பஞ்சாப் கிங்ஸ்- 50 லட்சம் INR

இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் 5 வீரர்களை விடுத்து மூன்று பயிற்சி ஊழியர்களும் IPL போட்டிகளில் தமது பங்குபற்றுதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மஹேல ஜெயவர்த்தன தலைமை பயிற்சியாளராகவும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பணிப்பாளராக குமார் சங்கக்கார மற்றும் ஹைதராபாத் அணியில் முத்தையா முரளிதரன் பந்துவீச்சு ஆலோசகராகவும் பங்காற்றுகின்றனர்.

இந்த சீசனில் 8 ஐபிஎல் அணிகளில் இலங்கையின் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பது இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.