IPL ல் இணைந்துள்ள இலங்கையின் வியாஸ்காந்த்…!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இலங்கை அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தம் செய்துள்ளார்.

காயம் காரணமாக இந்த ஆண்டு போட்டியில் இருந்து விலக வேண்டியிருந்த இலங்கை ஆல்ரவுண்டர் வனிது ஹசரங்கவுக்கு மாற்று வீரராக இந்த தேர்வு அமைந்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணியுடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் 50 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

தற்போது 22 வயதாகும் வியாஸ்காந்த், லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் முன்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் மற்றும் ILT20 இல் MI எமிரேட்ஸ் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்காக ஒரே ஒரு இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் (ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்) விளையாடியுள்ள வியாஸ்காந்த், இதுவரை 33 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

 

 

Previous article#SAvSL மகளிர் போட்டி மழையால் பாதிப்பு…!
Next articleIPL2024 இறுதிவரை போராடிய பஞ்சாப் -SRH வசமான வெற்றி..!