LPL அணிகளை மாற்றிக்கொள்ள தயாராகும் ஹசரங்க, பானுக ..!

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாம் கட்ட போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை  நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வனிது ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இம்முறை வீரர்கள் தெரிவு நடவடிக்கையில் இரண்டு புதிய அணிகளுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இம்முறை கண்டி அணியுடன் வனிது ஹசரங்கவும், தம்புள்ளை அணியுடன் பானுக ராஜபக்சவும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாண அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வனிது ஹசரங்க மற்றும் காலி அணியின் தலைவராக பானுக ராஜபக்ச விளையாடியிருந்தார்கள் என்பது முக்கியமானது.