LPL போட்டிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஶ்ரீலங்கா கிரிக்கெட்..!

2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை ஜூலை 1ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஜூலை 21ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது முறையாக நடைபெறவுள்ள இந்த LPL போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை ஐந்து.

இந்தப் போட்டியில் 24 போட்டிகள் உள்ளன. முதல் சுற்றின் 20 போட்டிகளுக்குப் பிறகு, இறுதிச் சுற்றின் 4 போட்டிகள் நடைபெறும்.

திசர பெரேரா தலைமையிலான யாழ் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் முதல் மூன்று தொடர்களில் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வனிது ஹசரங்க தலைமையிலான Be Love Candy அணி கடந்த முறை போட்டியின் சம்பியன் பட்டத்தை வென்றது.