LPL வீரர்கள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது !!!

LPL வீரர்கள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது !!!

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாம் வருட போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஐந்து அணிகள் மோதும் இந்த வருட லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாம் கட்ட போட்டி கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

கடந்தமுறை இடம்பெற்ற போட்டிகளில் திசர பெரேரா தலைமையிலான Jaffna Kings மகுடம் சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.