#PAKvSA-மீண்டும் பாவாட் அலாம் கலக்கல்- பாகிஸ்தான் வலுவான நிலையில்.

பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி இன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமானது.

முதலில் ஆடும் பாகிஸ்தான் அணி கடந்த போட்டியைப் போன்றே ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தாலும், பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இணைந்து நம்பிக்கை ஊட்டினார்.

ஆரம்ப 3 விக்கெட்களும் 22 ஓட்டங்களுக்கு இழக்கப்பட 4 வது விக்கெட்டில் பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இருவருமாக வீழ்த்தப்படாத 123 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இன்றைய நாள் நிறைவில் மழையால் ஆட்டம் நிறுத்தப்படும்வரை பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

களத்தில் பாபர் அசாம் 74 ஓட்டங்களுடனும் பாவாட் அலாம் 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது உள்ளனர்.

நாளை 2 ம் நாள் ஆட்டம் தொடரும்.