RCB அணியின் அடுத்த தலைவர் யார் முன்னாள் வீரரின் கணிப்பு .!

RCB அணியின் அடுத்த தலைவர் யார் முன்னாள் வீரரின் கணிப்பு .!

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவரும் ஆர் சி பி அணியின் தலைவருமான விராட் கோலி இந்தப் பருவகாலத்துடன் ஆர்சிபி தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஒக்சனில்  (Mega Auction ) ஆர்சிபி மிகச் சிறந்த தலைவரை அணிக்கு அழைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு கருத்தை முன்வைக்கிறார் .

அடுத்தமுறை ஆர்சிபி அணியை வழிநடத்த கூடிய வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணியினுடைய வீரர்கள் இருவருக்கு இருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருக்கிறார் .

பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஐதராபாத் அணியினுடைய அதிரடி வீரர் டேவிட் வோர்னரும் இந்த பட்டியலில் இருப்பதாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று வீரர்களுள் ஒருவர் அணியை வழிநடத்த கூடும் எனக் கருதப்படுகின்ற போது, லோகேஷ் ராகுலின் பெயரும் அதிகமாக பேசப்படுகிறதுஇவர்கள் விராட் கோலிக்கு பின்னர் ஆர்சிபி அணியை வழிநடத்துவர் என கருதப்படுகிறது.

குறிப்பாக ஆர்சிபி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14வது ஐபிஎல் தொடர் இடம்பெற்றுவரும் நிலையில், எந்த ஒரு ஐபிஎல் கிண்ணத்தையும் கைபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.