ரோகித் சர்மா பேட்டிங்கில் திடீரென சென்சிபிள் குமாராக மாறி இருப்பதற்கான காரணத்தை, ஹர்திக் பாண்டியாவின் நேற்றைய பேச்சிலிருந்து தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.
நேற்று மேட்ச் முடிவடைந்ததும் பேசிய ஹர்திக் பாண்டியா தாங்கள் பேட்ஸ்மேன்ஷிப்பில் வந்திருப்பதாகவும், அதாவது கேப் பார்த்து அடிப்பது, விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது, சூழ்நிலைக்குத் தகுந்தது போல விளையாடுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகப் பேசியிருந்தார். மேலும் இந்த வகையில் தாங்கள் எளிமையான முறையில் கிரிக்கெட் விளையாட முடிவு செய்ததாகவும், அது பலனளிக்க தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா பேச்சை அப்படியே கொஞ்சம் முன்னோக்கி விராட் கோலி பேசிய ஒரு கருத்துடன் ஒப்பிடும் பொழுது இன்னும் சில விஷயங்கள் புரியும்.
அதாவது விராட் கோலி சில போட்டிகளுக்கு முன்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவது கடினமாக இருக்கிறது என்றும், எனவே ஒன்று இரண்டு என ரன்களை எடுத்து, பார்ட்னர்ஷிப்பை கொண்டு வருவது முக்கியம் என பேசி இருந்தார்.
தற்போது இந்த நடைமுறைக்குள்தான் மும்பை இந்தியன்ஸ் அணியும் வந்திருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதற்குள் வந்துவிட்டது. மேலும் இதையேதான் தங்களுடைய வழக்கமான பேட்டிங் பாணியாக குஜராத் டைட்டன்ஸ் வைத்திருக்கிறது.
ரோகித் சர்மா சென்சிபிள் குமாரான பின்னணியும் பயணமும் இந்த வழியில் வந்ததுதான்!