SLvIND -முன்னணி இந்திய வீர்ர் உபாதையால் தொடரிலிருந்து விலகல்….!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தொடைப் பகுதியில் உண்டான காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியின் போது ஃபார்மில் உள்ள இந்திய பந்துவீச்சாளர் சாஹர் காயம் அடைந்தார்.

“அவர் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் NCA இல் அவர் உபாதையிலிருந்து மீண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்று BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கு சாஹர் உடல் தகுதி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அணியின் உதவிதலைவர் ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே அணியில் இருப்பதால், அணிக்கு மாற்றாக யாரையும் நாடவில்லை” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடர் லக்னோவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.