#SLvIND_இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் முரளிதரன் ..!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 தொடர் ஆரம்பித்திருக்கும் நிலையில், இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 தொடரில் இந்தியா கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக முரளிதரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இருந்தாலும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பெற்றிருப்பதால் அது இலங்கைக்கு நம்பிக்கைகளை கொடுக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆகவே 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி அவதானம் காக்க வேண்டும் எனும் கருத்தும் முரளியிடம் இருந்து வந்திருக்கிறது.
இந்த ஆட்டத்தை அவர்கள் வெல்ல முடியும் என்று கடைசி (3rd ODI) ஆட்டத்தில் இருந்து அவர்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும், இதனால் அவர்களுக்கு நம்பிக்கையும் கிடைத்திருக்கும்.
இது ஒரு புதிய தொடர் மற்றும் திட்டமிடல் மாறும், வீரர்களும் மாறக்கூடும். ஆதலால் இலங்கையும் வலுவாக வரும் ”என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார் .