T20 Worldcup- ஆஸி அணியில் இணைக்கப்பட்ட மேலதிக வீரர்கள்..!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இரண்டு மேலதிக வீரர்களை எடுப்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, 15 பேர் கொண்ட பிரதான அணியில் 16 மற்றும் 17வது வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போட்டியின் போது எந்த வீரருக்கும் காயம் ஏற்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக கூடுதல் வீரர்கள் எடுக்கப்படுவார்கள்.

முன்னதாக, தேர்வுக் குழுவின் தலைவர் ஜார்ஜ் பெய்லி, போட்டிக்கு கூடுதல் ஒரு வீரரை மட்டுமே எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், தற்போது அணியில் கூடுதல் வீரராக பெயரிடப்படுவதில் கவனம் செலுத்தியுள்ளார்.