The Hundred போட்டிகளுக்கு அனுமதி மறுப்பு-£100,000 ஒப்பந்தத்தை இழக்கும் ஹசரங்க…!

இலங்கை வீரர் வனிது ஹசரங்க இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹன்ட்ரட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்த போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெறாததே இதற்கு காரணம். இதன் காரணமாக, மான்செஸ்டர் அணியுடனான தனது £100,000 ஒப்பந்தத்தை வனிந்து இழக்க நேரிடும்.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை மற்றும் இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் தனது கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதியும், உலக டுவென்டி 20 தொடர் அக்டோபரிலும் தொடங்க உள்ளது. வனிது ஹசரங்கவினால் காலியான இடத்திற்கு தென்னாபிரிக்க வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்த அணியில் இணையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 28 பந்துகளில் 72 ரன்கள் குவித்து தனது அசத்தல் அறிமைகத்தை மேற்கொண்டவர் ஸ்டப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.